Thiruchendur Murugan: திருச்செந்தூர் முருகன் கோவிலில் சிறப்பு தரிசன கட்டணம் ரத்து

Special-darshan-fee-at-Thiruchendur-Murugan-Temple
தரிசன கட்டணம் ரத்து

Thiruchendur Murugan: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்ய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில் கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிரமமின்றி பக்தர்கள் தரிசனம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி இந்து அறநிலையத்துறை ஆணையர் சில நிபந்தனைகளுடன் கூடிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, கோவிலில் ஏற்கனவே இருந்து வந்த, நடைமுறையில் உள்ள ரூ.250 சிறப்பு தரிசன கட்டணம் மற்றும் ரூ.20 கட்டணம் தரிசனம் முறை ரத்து செய்யப்படுகிறது. ரூ.100 கட்டணமும் மற்றும் பொது தரிசனம் மட்டுமே இனி நடைமுறையில் இருக்கும்.

இதையும் படிங்க: Horoscope today: இன்றைய ராசி பலன்

இந்த தரிசன முறையிலும் மூலவரை இருவரிசையில் வருபவர்களும் சமமாக தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தரிசன முறை மாற்றம் இன்று முதல் (புதன்கிழமை) நடைமுறைப் படுத்தப்படுகிறது.

அதேபோல் கோவில் பாதுகாப்பு பணியில் 125 ஆயுதப்படை போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். இதில் முதல் கட்டமாக இன்று முதல் 60 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Thiruchendur Murugan

ரூ.100 கட்டண தரிசனம் மற்றும் பொதுதரிசன முறையில் வரும் பக்தர்கள் மகாமண்டபத்தில் இருந்து ஒரே வழியில் அனைத்து பக்தர்களும் சமமாக சென்று மூலவரை தரிசனம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி தரிசனம் செய்ய பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

கோவில் கைங்கர்யம் செய்யும் திரிசுதந்திரர்கள் தங்கள் பெயரை கோவிலில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், திரிசுதந்திரர்கள் பக்தர்களை தரிசனத்திற்கு அழைத்துச் செல்லக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையிலும் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க முறைபடுத்தப்பட்டுள்ளது. இம்முறை இன்று முதல் 15 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் நடைமுறையில் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Special darshan fee canceled at Thiruchendur Murugan Temple

இதையும் படிங்க: Horoscope today: இன்றைய ராசி பலன்