பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்ட கவிஞர் சினேகன்..!

பிரபல கவிஞர் சினேகனுக்கும் நடிகை கன்னிகா ரவிக்கும் இன்று சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் மிக பிரமாண்டமாக உலகநாயகன் கமலஹாசன் தலைமையில் திருமணம் நடந்து முடிந்த நிலையில், இவர்களது திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் திரையுலகில் இதுவரை 700க்கும் மேற்பட்ட படங்களில் 2 ஆயிரத்து 500க்கும் அதிகமான பாடல்களை எழுதியவர் கவிஞர் சினேகன். நடிப்பின் மீதான ஆர்வம் காரணமாக உயர்திரு 420, ராஜராஜ சோழனின் போர்வாள், பூமி வீரன் என சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தன் மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான சினேகன், அதன் பின்னர் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலக நாயகன் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இவர்களது திருமணத்தில் குடும்பத்தினர், மற்றும் பிரபலங்கள் பலர் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.