ஆண் குழந்தைக்கு தந்தையானார் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன்-ஆர்த்தி தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. தனது தந்தையே எனக்கு மகனாக பிறந்துள்ளார் என்று நெகிழ்ச்சி பதிவை சிவகார்த்திகேயன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், ” 18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக… என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி அம்மாவும் குழந்தையும் நலம் ” என்று தெரிவித்துள்ளார்.