ரஸ்க்குகளை நாக்கால் நக்கும் வடமாநில தொழிலாளி

ரஸ்க்குகளை பேக் செய்த போது வடமாநில தொழிலாளி அதனை தனது நாக்கால் நக்கி, தட்டில் வைக்கப்பட்டிருந்த ரஸ்க்குகளை காலால் தேய்த்தது தொடர்பான காணொளி இணையத்தில் வெளியாகி மக்களிடையே முகம் சுழிப்பை ஏற்படுத்தியது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தரமற்ற முறையில் சுகதாரமின்றி தரையில் கொட்டி, ரஸ்குகளை தயாரித்த பேக்டரிக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பூட்டுப்போட்டனர்.

காரைக்குடியில் உள்ள சுமார் பத்து ரஸ்க் பேக்டரிகள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தயாரிக்கப்பட்ட ரஸ்குகளை தரையில் கொட்டி அதனை பாக்கெட்டுகளில் நிரப்புவதை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதனையடுத்து தரமற்ற, சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட சுமார் 200 கிலோ ரஸ்குகளை குப்பையில் கொட்டிய அதிகாரிகள் அந்த தொழிற்சாலைக்கு சீல் வைத்து, விசாரணைக்கும் முடுக்கிவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பிரபல விஜே மணிமேகலை விபத்தில் சிக்கி மீண்டுள்ளார் !