என் வீட்டில் ரெய்டு நடத்துங்கள் பார்ப்போம்

என் வீட்டில், ஒரு முறை வருமான வரி, ‘ரெய்டு’ நடத்துங்கள் பார்ப்போம்,” என, சீமான் சவால் விடுத்தார்.

சென்னை, திருவொற்றியூர் தொகுதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமான், நேற்றிரவு, எர்ணாவூரில் பிரசாரம் மேற்கொண்டார். பின், அவர் அளித்த பேட்டி: தன்னாட்சி அதிகாரம் பெற்ற, வருமான வரித் துறை உள்ளிட்ட ஐந்து அமைப்புகளை, மோடி, ஐந்து விரல்களாக பயன்படுத்தி வருகிறார். இதை வைத்து மிரட்டுகிறார். அச்சுறுத்த கடைசி ஆயுதமாக, ஐ.டி., ரெய்டை பயன்படுத்துகின்றனர்.

ஏன், என் வீட்டில் ஒரு முறை, ரெய்டு நடத்தி பாருங்கள், பார்ப்போம். நகை மற்றும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்கின்றனர். ஏன் ஓராண்டிற்கு முன்பே, தள்ளுபடி செய்திருக்கலாம். வெற்று அறிவிப்புகளாக, இலவசங்களை அறிவித்து, மக்களை ஏமாற்றுகின்றனர். தேர்தல் கருத்து கணிப்புகள், திணிப்புகளாகவே உள்ளன. அதை தடை செய்ய வேண்டும். இவ்வாறு, சீமான் பேசினார்.