பள்ளிகளை திறக்க ஏற்பாடு தீவிரம்

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது 9 முதல் 12 வரை உள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்நிலையில் நவம்பர் 1 ம் தேதி முதலாக 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளதால் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய பள்ளி கல்வித்துறைக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியது டாடா குழுமம்