கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை !

கனமழைக்கு வாய்ப்பு
கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.வங்க கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து இன்று தெற்கு ஆந்திரா – வட தமிழக கடற்கரை நோக்கி நகர்கிறது.

இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.