மாணவர்களுக்கு பரவும் காய்ச்சல் !

கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக பள்ளிகள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டன.தற்போது செப் 1 முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் 6 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்த அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

திறக்கப்பட்ட பள்ளிகளில் சில மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.தற்போது தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் 50 பேருக்கு தொடர் காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது.இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க : பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ.960 கோடி பணம்