விடுதலையானார் சசிகலா…!

சொத்துகுவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைதண்டனை பெற்ற சசிகலாவின் தண்டனைக்காலம் நிறைவடைந்ததை முன்னிட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் சிறைத்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு நேரில் வந்து சசிகலாவின் விடுதலை குறித்த ஆவணத்தில் கையெழுத்து பெற்றனர். அவரது உடைமைகள் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் சிகிச்சை முடிந்து பிப்ரவரி 3ஆம் தேதி அண்ணா நினைவு தினம் அன்று சசிகலா சென்னை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்றைய தினம் 65 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க அவரது ஆதரவாளர்கள் தயாராகிவருகின்றனர்.