தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார்

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் மு.அப்பாவு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி முடிந்ததும், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்குப் புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அதேபோன்று, அமைச்சர்களும் புத்தகங்கள், சால்வைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

இதையும் படிங்க: அ.தி.மு.க.வுக்கு நாங்கள் நன்றி கடன்பட்டுள்ளோம்- அண்ணாமலை