மக்களே உஷார்..ரெட் அலெர்ட் !

orange alert : 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

தமிழகத்தில் பருவ மழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.தற்போது வரும் 10 ம் வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது, நாளை தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவில் 9-ம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, 11-ம் தேதி காலை வட தமிழக கடலோரப் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகும் என்று தெரிவித்தார்.

நவம்பர் 10ம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை (Red alert) விடுத்துள்ளது