சென்னையை வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றி

நடப்பு ஐபிஎல் சீசனின் 47-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி சென்னையை முதலில் பேட் செய்ய பணித்தது. அதனால் சென்னை அணி முதலில் பேட் செய்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது. அந்த அணிக்காக எவின் லூயிஸ் மற்றும் யாஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 75 ரன்களை குவித்தது ராஜஸ்தான். கிட்டத்தட்ட அந்த அணி ரன் குவிக்க அது அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.

எவின் லூயிஸ் 12 பந்துகளில் 27 ரன்களை குவித்து அவுட்டானார்.

19 வயதான இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் அரை சதத்தை பூர்த்தி செய்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதம் அடித்த Uncapped பிளேயர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார் ஜெய்ஸ்வால். ஆறு பவுண்டரி, மூன்று சிக்ஸர்கள் இந்த இன்னிங்ஸில் அடங்கும். அவரது ஆட்டம் சென்னைய மிரள வைத்தது.

இதையும் படிங்க: இன்றைய ராசி பலன்