Punjab: 184 வி.ஐ.பி.க்களின் பாதுகாப்பு அந்தஸ்து நீக்கம்

184 வி.ஐ.பி.க்களின் பாதுகாப்பு அந்தஸ்து நீக்கம்
184 வி.ஐ.பி.க்களின் பாதுகாப்பு அந்தஸ்து நீக்கம்

Punjab: பஞ்சாப்பில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், பஞ்சாப்பில் முன்னாள் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தனிநபர் என 184 பேருக்கு வழங்கிய வி.ஐ.பி.க்களுக்கான பாதுகாப்பினை ஆம் ஆத்மி அரசு நீக்கியுள்ளது.

சமீபத்திய அச்சுறுத்தலை ஆய்வு செய்து பாதுகாப்பு பற்றி மேற்கொண்ட மறுஆய்வு அடிப்படையில் இந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்படுவதற்கு தொடர்புடைய அரசு நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது என பாதுகாப்பிற்கான கூடுதல் டி.ஜி.பி. தெரிவித்து உள்ளார்.

இதன்படி, பல முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வளைய அந்தஸ்து நீக்கப்பட்டு உள்ளது. அவர்களில், முன்னாள் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி, குர்தர்ஷன் பிரார், ஐ.பி.எஸ். குர்தர்ஷண் சிங் மற்றும் உதய்பீர் சிங் (முன்னாள் மத்திய மந்திரி சுக்ஜிந்தர் சிங் ரந்தவாவின் மகன்) ஆகியோரின் குடும்பத்தினர் அடங்குவார்கள்.

இதேபோன்று, முன்னாள் கேபினட் மந்திரிகள் சுர்ஜித் சிங் ராக்ரா மற்றும் பிபி ஜாகிர் கவுர், தோட்டா சிங் (சிரோமணி அகாலி தளம் மோகா), முன்னாள் காங்கிரஸ் எம்.பி. வரீந்தர் சிங் பஜ்வா, சந்தோஷ் சவுத்ரி மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. தீப் மல்கோத்ரா ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பும் திரும்ப பெறப்பட்டு உள்ளது.

இவர்கள் தவிர,
ராஜேஷ் பாகா (பா.ஜ.க.வின் மாநில துணை தலைவர்), மஹி கில் (பா.ஜ.க.வின் நட்சத்திர பிரசார பேச்சாளர்), மற்றும் ஹரீந்தர் சிங் கோலி (மாவட்ட பா.ஜ.க. தலைவர்) ஆகியோருக்கான பாதுகாப்பும் நீக்கப்பட்டு உள்ளது.

எனினும், சுப்ரீம் கோர்ட்டு அல்லது ஐகோர்ட்டு சிறப்பு உத்தரவின்பேரில் நியமிக்கப்பட்ட பாதுகாவலர்கள் வாபஸ் பெறப்படவில்லை. கடந்த மார்ச் 12ந்தேதி, எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் என 122 பேருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.

Punjab: 184 VIPs lose security cover

இதையும் படிங்க: கத்தியால் தாக்கப்பட்டு காயமடைந்த பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம்: முதலமைச்சர் அறிவிப்பு