மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது

திருவாரூரில் மகள் கண்முன்னே தந்தை உயிரிழப்பு
திருவாரூரில் மகள் கண்முன்னே தந்தை உயிரிழப்பு

கோவையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அரசு கலை கல்லூரி பேராசிரியர் ரகுநாத் கைது செய்யப்பட்டார்.

கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் பிபிஏ துறை பேராசிரியர் ரகுநாத், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகாரளிக்கப்பட்டது. இந்த நிலையில், பேராசிரியர் ரகுநாத்தை பந்தய சாலை காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பேராசிரியர் மீது மானபங்கப்படுத்துதல் (354), கடத்தல் (365), கொலை மிரட்டல் (506(2)) மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.