Padma shree: டெல்லியில் பத்மஸ்ரீ விருதுகளை வழங்கிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்..!

president-ramnath-govind-presents-padma-shri-awards-in-delhi
ராம்நாத் கோவிந்த்

Padma shree: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் டெல்லியில் நடைபெற்ற விழாவில் 2022-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை வழங்கினார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் டெல்லியில் நடைபெற்ற விழாவில் 2022-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி, மருத்துவர் வீராசாமி சேசய்யாவுக்கு பத்மஸ்ரீ விருதுகளை வழங்கினார்.

மேலும், சமூகச்செயற்பாட்டாளர் தாமோதரன், தவில் இசைக்கலைஞர் முருகையன் உள்ளிட்டோரும் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றனர். அதனை தொடர்ந்து, மறைந்த உ.பி.முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், பிரபா ஆத்ரே ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், பாரத் பயோடெக் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணா எல்லா, இணை இயக்குனர் சுசித்ரா எல்லாவிற்கு பதம்பூஷன் விருது வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: Beauty tips : ஜப்பான் நாட்டு பெண்களின் அழகு குறிப்புகள்