கொடூரம்..வயிற்றில் குழந்தையுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் !

குடி பழக்கத்தால் அழிந்த குடும்பங்கள் ஏராளம்.அந்த வகையில்,கணவரின் குடிப்பழக்கத்தால் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் கொடைக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் கூலித்தொழிலாளியான இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் 2 குழந்தைகள் உள்ளனர்

தற்போது ஈஸ்வரி மூன்று மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.கணவன் குடி பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதை மனைவி கண்டித்துள்ளார்.எனவே இருவருக்கும் அடிக்கடி தகராறு நடந்துள்ளது.

மேலும் இருவருக்கும் பிரச்னை முற்றி உள்ளது இதனால் கடும் மன உளைச்சலில் 3 மாத கர்ப்பிணியான ஈஸ்வரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.