கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என டெல்லி மேலிடம் அறிவித்துள்ளது.

2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்ணன் 2019-ல் நடந்த மக்களவை தேர்தலில் தோல்வியை தழுவினார். தற்போது மீண்டும் அத்தொகுதியில் போட்டியிடுகிறார்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் காங்கிரசில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.