PM-KISAN: வங்கி கணக்கில் ரூ.2000 செலுத்திய பிரதமர்!

TN news : பிரதமரின் பொங்கல் விழா ரத்து !
பிரதமரின் பொங்கல் விழா ரத்து !

PM-KISAN: மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறது.

அதன்படி இதுவரை 9-வது தவணைப் வழங்கப்பட்டுள்ளது. தற்போது புத்தாண்டு நாளான இன்று விவசாயிகளுக்கு 2000 ரூபாய் போடப்படுகிறது. மேலும் 11 கோடி 60 லட்சம் ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Sivakasi fire accident: சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து