Terrorist attack: ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் தாக்குதல்- துணை ராணுவ வீரர் உயிரிழப்பு

துணை ராணுவ வீரர் உயிரிழப்பு
துணை ராணுவ வீரர் உயிரிழப்பு

Terrorist attack: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள பாதுகாப்பு படையினரின் சோதனைச்சாவடியை குறிவைத்து பயங்கரவாதிகள் இன்று திடீர் தாக்குதல் நடத்தினர். கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்குதல் நடத்திவிட்டு பயங்கரவாதிகள் தப்பிச் சென்றுவிட்டனர். இந்த தாக்குதலில் சிஆர்பிஎப் படையைச் சேர்ந்த ஒரு வீரர் உயிரிழந்தார். ஒருவர் காயமடைந்தார்.

இதையடுத்து அப்பகுதி முழுவதையும் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து, பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் புலம்பெயர் தொழிலாளர்கள் 2 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: HDFC merge : இணையும் ஹெச்டிஎப்சி, எச்டிஎஃப்சி வங்கி