மக்கள் நீதி மய்யம் கட்சியின் சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளரும், மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டவருமான பத்ம பிரியா கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தேர்தலுக்கு பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் அடுத்தடுத்த விலகி வரும் சூழலில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிக கவனம் பெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரான பத்ம பிரியா தற்போது கட்சியில் இருந்து விலகுவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மதுரவாயல் தொகுதில் போட்டியிட்ட பத்ம பிரியா 33401 வாக்குகள் பெற்று கவனம் ஈர்த்தார். தற்போது அவர் சொந்தக் காரணங்களுக்காக கட்சியின் சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் கட்சியில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார்.