புதிய வேளாண் சட்டம் குறித்து ப.சிதம்பரத்தின் ட்விட்டர் பதிவு !

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பியுமான ப.சிதம்பரம் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

அந்த பதிவில், “திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கிறார், உழவனின் கை தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், எல்லாப் பற்றையும் கைவிட்டுவிட்டோம் எனக் கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை என்று. இன்று அது எவ்வளவு உண்மையாகியுள்ளது. தன்னை ஏமாற்றிவிட்டதாக கருதும் விவசாயிகளின் கடுங்கோபத்தை எந்த அரசாலும் எதிர்கொள்ள முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.