orange alert : 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் !

orange alert : 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

orange alert : தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காலத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதனால், நடப்பு ஆண்டில் தமிழகத்தில் அதிக அளவு மழை பதிவாகி இருந்தது.

இந்த நிலையில், சென்னையில் இன்று நண்பகலில் திடீரென சாரல் மழை பெய்து மக்களை குளிர்வித்தது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்து உள்ளது.orange alert

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Sahitya Akademi Award for writer ambai : சாகித்ய அகாடமி விருது பெரும் எழுத்தாளர் அம்பை !