தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.வடகிழக்கு பருவமழை காரணமாக கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.
நீலகிரியில் கடந்த 23 ஆம் தேதி ஹில்குரோவ் மற்றும் அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே மண் சரிவு ஏற்பட்டது. train cancelled in ooty due to landslides
இந்நிலையில், மீண்டும் மழை தொடர்வதால் மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், டிசம்பர் 14-ம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.