யூடியூபர் ‘நாகை மீனவன்’ படகில் 280 கிலோ கஞ்சா..!

மீனை பற்றியும் மீனவர்களை பற்றியும் கடலுக்கு செல்லும் நேரங்களில் பேசி யூ டியூபில் வீடியோ வெளியிட்டு வருகிறார் நாகை மீனவன். இவரது சேனலுக்கு 68 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.

நாகை துறைமுகத்தில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் சுங்கத்துறை கமிஷனர் செந்தில்நாதன் தலைமையில் 15 பேர் கொண்ட குழு, நேற்று இரவு கடலோர பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தியது.

அப்போது, அவர்களது படகு மீண்டும் நாகை துறைமுகம் நோக்கி வந்தபோது வேறொரு படகில் சிலர் மூட்டைகளை ஏற்றியுள்ளனர். அதிகாரிகள் வருவதை பார்த்ததும் அந்த நபர்கள் படகையும், இரு சக்கர வாகனங்களையும் அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர்.

பின்னர் படகில் ஏற்றப்பட்டிருந்த மூட்டைகளை சோதனையிட்டதில் 280 கிலோ எடைகொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது. அதன் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் எனவும் கூறப்படுகிறது.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கஞ்சா ஏற்றப்பட்ட படகு பிரபல யூ டியூபர் ‘நாகை மீனவன்’ என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்களை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து உலக தலைவர்கள் அக்கறை இன்றி செயல்படுகின்றனர்- கிரேட்டா தன்பெர்க்