omicron in karnataka:பெங்களூரு விமான நிலையத்தில் 2 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது !

தென்னாப்பிரிக்காவிலிருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு 29-ஆம் தேதி வந்த இரண்டு பேருக்கு ஓமிக்ரான் பாசிட்டிவ் சோதனை செய்த பிறகு அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இரண்டு நோயாளிகளும் கர்நாடகாவைச் சேர்ந்த 66 வயது மற்றும் 46 வயதுடைய ஆண்கள் என்று தெரியவந்துள்ளது.

அவர்களுக்கு லேசான அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது.அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

omicron variant பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை உயிரிழக்கவில்லை என்றாலும், இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து, ஒமைக்ரான் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.