இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 111 ஆக உயர்ந்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சமீப நாட்களாக சரிவடைந்து வருகிறது. நாளொன்றுக்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்திற்கு மேல் பதிவாகி வந்த நிலையில், இன்று 46,964 பேருக்கு பாதிப்புகள் அறியப்பட்டு உள்ளன.

இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 81 லட்சத்து 84 ஆயிரத்து 83 ஆக உயர்வடைந்து உள்ளது. இதேபோன்று கொரோனா பாதிப்புகளால் 470 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 111 ஆக உயர்வடைந்து உள்ளது.

மொத்த சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்து 70 ஆயிரத்து 458 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 74 லட்சத்து 91 ஆயிரத்து 513 ஆகவும் உயர்வடைந்து உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.