கரோனா தடுப்பூசி போட்டும் தொற்று ஏற்பட்டால் உயிரிழப்பு நிகழாது :எய்ம்ஸ் ஆய்வில் முடிவு !

Booster vaccine
இன்று முதல் செலுத்தப்படும் பூஸ்டர் தடுப்பூசி

இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளன.மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கரோனாவால் பாதிப்பு அடைவதாகத் தகவல்கள் வந்தன. இதையொட்டி எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் ஆய்வு நடத்தினர்.இந்த ஆய்வு குறித்த அறிக்கையில்,

இந்த ஆய்வில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு கரோனா வந்த 36 நோயாளிகளும், ஒரு டோஸ் போட்டு தொற்று பாதிப்புக்குள்ளான 27 பேரும் என 63 பேர் உட்படுத்தப்பட்டனர். இதில் 10 பேர் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் மீதம் உள்ளோர் கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ஆவார்கள்.

மேலும் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் பரிசோதனையின் போது வைரஸ் அளவு அதிகமாகவும் காய்ச்சலும் இருந்தது. காய்ச்சல் 5 முதல் 7 நாட்கள் வரை இருந்தது. தடுப்பூசி போடாமல் கரோனா பாதித்தவர்களைப் போன்றே இது இருந்தது.

பாதிப்படைந்தோர் உடலில் தடுப்பூசியால் நோய் எதிர்ப்பு பொருள் உருவாகி இருந்தாலும், தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் மற்ற நோயாளிகளைப்போலவே ஆஸ்பத்திரியில் சேர்க்கும் நிலை ஏற்பட்டாலும் யாருக்கும் மரணம் நேரவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.