மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா பாதிப்பு !

கொரோனா தொற்றின் 2 ம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.இதன் பாதிப்பை கட்டுஅடுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்தது இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.கடந்த ஞாயிற்று கிழமை தமிழகத்தில் 6 வது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர், பிங்கர் போஸ்ட் அருகே உள்ள அவருடைய முகாம் அலுவலகத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இதையும் படிங்க : ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடும் ‘கூழாங்கல்’ படம்