10 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு – உத்திர பிரதேசம் !

கரோனா தொற்று மீண்டும் அதிகமாக பரவ தொடங்கியுள்ளது.இதை தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது.தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் 15 நாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் 10 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கை மாநில அரசு கொண்டு வந்துள்ளது.

இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை ஊரடங்கை அமல்படுத்துமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.லக்னோ, அலகாபாத், வாரணாசி, கான்பூர், கவுதம் புத்த நகர், காஜியாபாத், மீரட், கோரக்பூர் ஆகிய மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.