மாநிலங்களுக்கு மேலும் 57.70 லட்சம் தடுப்பூசிகள்

மாநிலங்களுக்கு மத்திய அரசு மேலும் 57.70 லட்சம் தடுப்பூசிகளை 3 நாளில் வழங்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றை தடுத்து நிறுத்துவதற்காக உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜனவரி 16-ந்தேதி தொடங்கி செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள மாநிலங்களுக்கும், யூனியன்பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரை 15 கோடியே 95 லட்சத்து 96 ஆயிரத்து 140 தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி உள்ளது.

இதை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்தது.