ஜூலை 19 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் !

ஜூலை 19-ம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கூட்டத்தொடர் மிகவும் காலதாமதாக கடந்த செப்டம்பார் மாதம் கூடியது.அதன் பிறகு டிசம்பர் மாதம் நடைபெற வேண்டிய குளிர்கால கூட்டத்தொடரும் பல்வேறு காரணங்களுக்காக நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

தற்போது இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஜூலை 19 ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.