பிரதமர் மோடி இன்று மாலை காணொளி வாயிலாக ஆலோசனை

கொரேனா தடுப்பூசி தயாரிப்பாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6 மணியளவில் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா 2-ஆம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் மருத்துவர்கள், மருந்து நிறுவனங்களுடன் பிரதமர் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன் முடியில் 18 வயது நிரம்பியவர்களுக்கு மே 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும், மாநிலங்கள் நேரடியாக தடுப்பூசிக் கொள்முதல் செய்யவும் அனுமதி தரப்பட்டுள்ளதால், அதற்கான ஏற்பாடுகள், திட்டமிடல் தொடர்பாக தடுப்பூசி தயாரிப்பாளர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசிக்க இருக்கிறார்.