வரலாற்றாசிரியர் புரந்தரே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

வரலாற்றாசிரியர் ஷிவ்ஷாகிர் பாபாசாகேப் புரந்தரே மறைவுக்குப் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, வார்த்தைகளைக் கடந்த வலியுடன் நான் இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவைச் சேரந்த பிரபல வரலாற்றாசிரியர் ஷிவ்ஷாகிர் பாபாசாகேப் புரந்தரே. இவரது இயற்பெயர் பல்வந்த் மொரேஷ்வர் புரந்தரே. மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியைப் பற்றி பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். இந்திய வரலாறு தொடர்பாக பல்வேற ஆராய்ச்சிகள் நடத்தியவர். பிரபலமான ஜண்ட ராஜா நாடகத்தை இவர் எழுதினார்.

2019ஆம் ஆண்டில் இந்தியாவின் 2ஆவது மிக உயரிய விருதான பத்ம விபூஷன் விருது இவருக்கு வழங்கப்பட்டது.