கொரோனா வராமல் தடுக்கும் மாடர்னா தடுப்பூசி

12 வயது முதல் 17 வயதுள்ள பிரிவினருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் எங்கள் நிறுவனத்தின் தடுப்பூசி 100 சதவீதம் பாதுகாப்பு அளிக்கிறது என்பது பல்வேறு ஆய்களில் தெரியவந்துள்ளது என்று அமெரிக்காவின் மாடர்னா மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு கடந்த வாரம் வெள்ளியன்றுதான், மாடர்னா தடுப்பூசியை அவசரத் தேவைக்குப் பயன்படுத்திக்கொள்ள உலக நாடுகளுக்கு அனுமதி அளித்தது. விரைவில் பதின்வயதுப் பிரிவினருக்கும் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு மாடர்னா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கலாம்.

முன்னதாக, இந்த மாதத் தொடக்கத்தில், அமெரிக்காவின் மத்திய நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு பைஸர் நிறுவனம் தனது தடுப்பூசியை 12 முதல் 15 வயதுள்ள பிரிவினருக்குப் பயன்படுத்த அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.