சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைத்த சமையல்காரர்

உத்தரபிரதேச மாநிலத்தில் ஓட்டலில் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைத்த சமையல்காரரை போலீசார் கைது செய்த பின்னர் அவர் ஜாமீனில் நேற்று வெளியே வந்தார். இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள சாலையின் அருகே உள்ள ஓட்டலில் சமையல்காரர் ஒருவர் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைப்பது போன்ற வீடியோ இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

ஓட்டல் சமையல்காரர் சப்பாத்தியை சுடுவதற்கு முன்னர் அதில் எச்சில் துப்பவுதும் அதை சமைப்பதும் போல வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச மாநில போலீசார் விசாரணை நடத்தியதில் ஓட்டல் சமையல்காரர் தமீசுதீன் என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தமீசுதின் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட தமீசுதின் ஜாமீனில் நேற்று வெளியே வந்தார். இந்த வீடியோவை இணையத்தில் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.