மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி !

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறவுள்ளது.இந்நிலையில்,அணைத்து கட்சிகளும் மும்னுரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது, அவரை பார்த்த மக்கள் ஆர்வமாக அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள கூடினார்கள். அப்போது தவறுதலாக கமல்ஹாசனின் காலில் யாரோ மிதித்து விட்டார்கள்.

மேலும் அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது . இந்நிலையில் மீண்டும் காலில் வலி ஏற்பட்டதால், உடனடியாக தனியார் மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்துக் கொண்டு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றார்.

மேலும் மருத்துவர்கள் நடிகர் கமலிடம் ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து கமலின் பிரச்சாரப் பயண திட்டங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.