வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்திய போலீஸ்..!

baby shower for dog: மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் மதுரை மாநகர காவல்துறையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் சக்திவேல் தனது வீட்டில் கடந்த 3 வருடங்களாக சுஜி என்ற பெண் நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வருகிறார். சமீபத்தில் இந்த நாய் கருவுற்றதையடுத்து வளைகாப்பு நடத்த குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

அதன்படி, நேற்று நாய் சுஜிக்கு வளைகாப்பு நடத்தினர். அப்போது அருகில் வசிப்பவர்களையும் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு அழைத்தனர். வளைகாப்பில் பெண் நாய் சுஜிக்கு வளையல்கள், மாலை அணிவித்து ஒரு பெண்ணுக்கு வளைகாப்பு நடத்துவது போல நடத்தினர்.

மேலும் 5 வகை உணவுகளை தயார் செய்து அதனை சுஜிக்கு அளித்ததோடு, வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் வழங்கினர். வளர்ப்பு நாய் சுஜிக்கு நடத்திய வளைகாப்பு வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: Vladimir Putin in India: இன்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் டெல்லி வருகை