Liquor sale: மதுரை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி சிலர் மது விற்பதாக மாநகர போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த நிலையில் ஜெய்ஹிந்த்புரம் டீக்கடை அருகே வாலிபர் ஒருவர் மதுபானம் விற்றதாக பிடிபட்டார். அப்போது அவரிடம் இருந்து 24 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் அவர் என்.எஸ்.கே. நகரை சேர்ந்த ஆனந்தகுமார் (வயது42) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கைது செய்தனர்.
மதுரை காளவாசல் பகுதியில் பெண் ஒருவர் மதுவிற்பதாக கரிமேடு போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு மது பாட்டில் விற்றதாக சாமிநாதன் மனைவி பாண்டியம்மாள் (வயது59) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 30 குவார்ட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை காளவாசல் டீக்கடை அருகே, பாண்டியன் நகர் வாய்க்கால் கரை அர்ஜூனன் மனைவி பஞ்சு (வயது54) என்பவரை கரிமேடு போலீசார் 14 மது பாட்டில்களுடன் கைது செய்தனர். மதுரை மாநகரில் நேற்று மட்டும் 68 குவார்ட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
3 person arrested on liquor sale
இதையும் படிங்க: Actor Ajith: அஜித் தேர்தலில் வாக்களிக்காததற்கு இதுதான் காரணம் – டி.ராஜேந்தர் பேட்டி