IPL 2022: ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி மும்பை மற்றும் புனேயில் நடைபெற்று வருகிறது. 25-வது நாளான இன்று நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்-டுபெலிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளன. நிகர ரன்ரேட் அடிப்படையில் லக்னோ 3- வது இடத்திலும், பெங்களூரூ 4-வது இடத்திலும் உள்ளன.இதனால் 5- வது வெற்றியை பெறப்போவது யார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி பெங்களூரூ அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.
IPL 2022: Lucknow Super Giants opt to bowl against Royal Challengers Bangalore
இதையும் படிங்க: கவர்னர் கார் மீது கல்வீச்சு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்