நஷ்டத்தில் இயங்கும் டாஸ்மாக் !

தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில் டாஸ்மாக்கிற்கு ரூ.312.43 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போது, 5,425 டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. தினந்தோறும் சராசரியாக ரூ.100 கோடி மதிப்பிலான சரக்கு வகைகள் விற்பனையாவதாக கூறப்படுகிறது.

தற்போது கொரோனா பரவல் காரணமாக காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.

2015-16ம் ஆண்டில் ரூ.67.61 கோடி, 2019-20 நிதியாண்டில் ரூ.71.93 கோடிக்கு டாஸ்மாக்கில் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சந்தைக்கு வருகிறது Redmi Note 11 !