Local Holiday: நாளை உள்ளூர் விடுமுறை

local-holiday-announcement-in-tenkasi
உள்ளூர் விடுமுறை

Local Holiday: தமிழகத்தில் பங்குனி உத்திரம் முருகப்பெருமானுக்கு சிறப்பு மிகுந்த விரத நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த அற்புத நாளில் முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார, பூஜைகள் நடத்தப்படும். அன்றைய தினம் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவதும், நேர்த்தி கடன் செலுத்துவதும் தனிச்சிறப்பாகும்.

எனவே நாளை 18.03.2022 அன்று வரக்கூடிய பங்குனி உத்திரம் தினத்தில் அருகில் இருக்கும் முருகன் திருக்கோயில்கள், சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.

இதுதொடர்பாக தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:

பங்குனி உத்திர திருவிழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாளை மார்ச் 18ம் தேதி தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

அதே சமயம் தென்காசி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கிய தேர்வுகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது.

இவ்வாறு தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கின்றனர்.

இதையும் படிங்க: Syllabus: அனைத்து கல்லூரிகளிலும் பாடத்திட்டம் மாற்றம்- அமைச்சர் பொன்முடி