எம்.ஜி.ஆர் ஜெயலலிதா காட்டிய வழியில் செல்வேன்- சசிகலா

சங்கரன்கோவிலை சேர்ந்த தன்னுடைய ஆதரவாளர் கலைச்செல்வனுடன் தொலைபேசி வாயிலாக பேசிய சசிகலா கூறியதாவது, நல்லபடியாக கழகத்தை கொண்டு சென்று அம்மா ஆட்சியை மீண்டும் வர வைக்க வேண்டும். ஊரடங்கு முடிந்ததும், நான் அனைவரையும் சந்திப்பேன்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரையும் அரவணைத்து செல்லவே நான் விரும்புகிறேன். தொண்டர்களின் விருப்பப்படி கட்சியை வழிநடத்துவேன். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா காட்டிய வழியில் செல்வேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.