ரோகித் சர்மாவை துணைக் கேப்டன் பதவியிலிருந்து விலக சொன்னாரா விராட் !

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பெரும் அளவில் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளனர்.உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கு பிறகு இந்திய டி20 அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விராட்கோலி விலக உள்ளதாக அறிவித்தார்.

நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கோலியை விட ரோகித் சர்மா சிறப்பான கேப்டன்சியை செயல்படுத்தினார் என்ற கருத்துகள் எழுந்தன.

இந்நிலையில் இந்திய ஒருநாள் அணியில் துணை கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மாவை நீக்க வேண்டும் என கோலி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவருக்குப் பதிலாக கே.எல். ராகுலை துணை கேப்டனாக நியமிக்க வேண்டும் என கோலி கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க : சூப்பர்..ஒரே நாளில் 2 கோடி பேருக்கு தடுப்பூசியா !