மிகுந்த பாதுகாப்புடன் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை

கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை, மிகுந்த பாதுபாப்புடன் நடைபெற்று வருகிறது.

ஆனால், தற்போது பாஜக தெலங்கானா உள்ளாட்சித் தேர்தல் போன்று கணிசமான வெற்றியை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், 5 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், இடதுசாரிகள், காங்கிரஸ், பாஜக-வுக்கு உள்ளாட்சித் தேர்தல் வெற்றி, என்பது பேரவைத் தேர்தலுக்கான ஒத்திகையாகவும் பார்க்கப்படுகிறது.

இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையில், ஆளும் இடது சாரி கட்சிகள் முன்னிலை வகித்து வருகின்றன.