கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் கரோனா தொற்று உறுதி !

கரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கிய நிலையில் நாள் தோறும் இதன் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதுவரையில் இல்லாத புதிய உச்சமாக ஒரே நாளில் 1.26 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் மிக அதிக அளவில் பாதிப்பை எதிர்கொள்கின்றன.

இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சையை உண்டாக்கியுள்ளது. கேரள சட்டமன்றத்தேர்தலையொட்டி பல்வேறு கூட்டங்களிலும் பரப்புரைகளிலும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்றிருந்தார்.

அவர் கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி கொரோனாவுக்கான முதல் தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.