நடிகர் கருணாஸ் வீட்டுக்காவலில் வைப்பு..!

நேற்று மாலை முதல்-அமைச்சர் காரைக்குடிக்கு வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையில் நடிகர் கருணாஸ் சிவகங்கை அருகே பனங்காடி கிராமத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் இருப்பதாக சிவகங்கை நகர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் அங்கு சென்று கருணாசை கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தனர்.

இதனை அறிந்து அவரது ஆதரவாளர்கள் அங்கு குவிந்தனர். ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.