கரோனா அதிகம் தாக்கும் மாநிலமாக கர்நாடகா உள்ளது !

இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை அதிகரித்து வருகிறது.பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் ஊரடங்கை அறிவித்துள்ளது .பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக கர்நாடகா உள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் இன்று மேலும் 31,531 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,03,462 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 403 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21,837 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 36,475 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.