விரைவில் குணமடைவேன் என கபில் தேவ் நம்பிக்கை..!

விரைவில் குணமடைவேன் என கபில் தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் கபில் தேவ் குறிப்பிடத்தக்கவர். உலக கிரிக்கெட் அரங்கில் புகழ்பெற்ற ஆல்ரவுண்டர். இந்தியாவிற்கு முதல் முதலாக உலக கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் கபில் தேவ்.

கபில் தேவிற்கு நேற்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று அஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்டது.

தற்போது உடல் நிலை சீரடைந்துள்ள கபில் தேவ் தான் விரைவில் குணமடைந்து திரும்புவேன் என கூறியுள்ளார். தனக்கு ஆறுதலாக இருந்த அணைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.