திமுக.,வின் சாயம் வெளுத்துவிட்டது- கமல்

கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், திமுக.,வின் சாயம் வெளுத்துவிட்டதாக தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: கொரோனாவில் தேர்தல் நடக்கும். வாக்கு எண்ணிக்கை நடக்கும். பதவி ஏற்பு விழா நடக்கும். சட்டமன்றம் நடக்கும். உள்ளாட்சித் தேர்தலுக்கான முஸ்தீபுகள் நடக்கும். ஆனால், கிராம சபை மட்டும் நடக்காது. அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

முந்தைய ஆட்சியில் கிராம சபை நடத்த தொடுத்த வழக்கை திமுக ரகசியமாக வாபஸ் பெற்றுக் கொண்டபோதே இந்த அரசும் கிராம சபைகளைக் கண்டு அஞ்சுகிறது என்பதைப் புரிந்துகொண்டோம். திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.