சசிகலாவின் விடுதலையை அதிமுக பொருட்படுத்தவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலா விடுதலை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சசிகலாவின் விடுதலையை அதிமுக பொருட்படுத்தவில்லை என்றார். மேலும் இமயமலையில் இருந்து கன்னியாகுமரி வரை திமுக பிரச்சாரம் செய்தாலும் அதிமுக கவலைப்படாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை அதிமுக செய்து வருகிறது. பிரசாந்த் கிஷோர் எழுதித் தரும் புதுப்புது தலைப்புகளில் என்ன செய்தாலும், திமுகவால் தேர்தலில் சாதிக்க முடியாது. கனிமொழி உள்ளிட்டோர் இமயமலையில் இருந்து கன்னியாகுமரி வரை பிரச்சாரம் செய்தாலும் அதிமுக கவலைப்படாது.